சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையில் முறைகேடு என்று பாஜக தமிழக தலைவர் முருகன் கூறிய குற்றச்சாட்டுக்கு காங். கட்சி தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி மறுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எல்.முருகன் குற்றம் சாட்டினார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய அவர், காமராஜரால் உருவாக்கப்பட்ட சென்னை காமராஜர் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை, மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இது குறித்து வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.  இந் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என தமிழக பா.ஜ.க. தலைவர் பேசியுள்ளார் என்று அவர் விமர்சித்துள்ளார். பெருந்தலைவரின் வழியில் இதய சுத்தியோடு, ஏழைகளுக்காக, நேர்மையாக பணியாற்றுகிறது அறக்கட்டளை என்று குறிப்பிட்டுள்ளார்.