சென்னை:

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து உள்ளது.

அரசு வேலைகளுக்கான ஆட்களை தேர்வு செய்யும் துறையான தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2ஏ தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்த குரூப்2 ஏ தேர்வில் நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வு மட்டுமே நடைபெறும்.

தமிழகத்தில் காலியாக உள்ள  41 துறைகளில் 1953 பணியிடங்களுக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்த காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு இன்று முதல் மே 26ம் தேதி வரை விண்ணப்பிக்க லாம்.

தனி எழுத்தர், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மனை வரை தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தேர்வுக்கட்டணத்தை மே 29ம் தேதி வரை தபால் அல்லது வங்கி அலுவலகங்கள் மூலம் செலுத்தலாம்.

மேலும் கூடுதல் விவரங்களை http://www.tnpsc.gov.in/latest-notification.html என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்