சென்னை: பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறி உள்ளார்.

ஜனவரி 3ம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 1 தோ்வு நடைபெற்றது. 2,56,000க்கும் மேற்பட்டோர் இந்த தோ்வை எழுத விண்ணப்பித்தனா். தேர்வு முடிந்த நிலையில் வினாத்தாளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும், இழப்பீடு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குரூப்  1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: குரூப் 1 தேர்வு வினா-விடை தவறு குறித்து நிபுணர் குழு ஆய்வு நடத்தி வருகிறது. தவறுகள் இருப்பின் சரி செய்யப்பட்டு பிப்ரவரி முதல் வாரத்திற்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறினார்.