சென்னை:

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு பற்றி ஸ்டாலின் பொத்தாம் பொதுவாகக் கூறுகிறார், என் மீது குற்றம் சாட்டினால் அவர் மீது வழக்கு தொடர்வேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் மிரட்டல் விடுத்துள்ளார்.

தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது டிஎன்பிஎஸ்சி முறைகேடு. தினமும் புதுப்புதுத்தவல்கள் வெளியாகி வருகிறது. இந்த மாபெரும் முறைகேடு தொடர்பாக இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேற்ற வெளியிட்ட அறிக்கையில், 2017 ஆம் ஆண்டு நடந்த குரூப் 1 தேர்விலேயே முறைகேடு நடந்து இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது என்றும், முறைகேட்டில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் தான் என்று உலக மகா யோக்கியர் போலப் பேட்டி தரும் அமைச்சர் ஜெயக்குமார், உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கி கொடுப்பாரா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,   ” டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் யார் என்று மு.க ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும். அவர் என் மீது குற்றம் சாட்டினால் நான் அவர்மீது வழக்கு தொடர்வேன் என்று மிரட்டியவர், குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஸ்டாலின் சொன்னால், அவர்களுக்கு  சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி  உண்மை வெளிக்கொணரப்படும்  என்றவர், ஸ்டாலின் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டி வருகிறார் என்று கூறினார்.