சென்னை:
றப்போர் இயக்கம் குற்றச்சாட்டின் எதிரொலியாக கிராமப்பகுதிகளுக்கு பைபர் ஆப்டிக் மூலம் இணையதளம் செயல்படுத்தும்  ரூ.2ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டர் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு பைபர் ஆப்டிக் கேபிள் அமைப்பது தொடர்பாக  ரூ 2000 கோடி  மதிப்பிலான டெண்டர் விடுவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை செய்து வந்தது.

இந்த டெண்டரில் ஊழல் அரங்கேற்றுவதற்கான வேலைகள் நடந்திருப்பாகவும், பல்வேறு மாற்றங்கள் செய்துள்ளதாகவும்  அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது.
இது தொடர்பாக முதல்வர், தலைமை செயலாளர் மற்றும் மத்திய அரசின் தொலை தொடர்பு செயலாளர், மத்திய விஜிலன்ஸ் கமிஷன் மற்றும் காம்படிஷன் கமிஷனிடம் ஏற்கனவே 19/04/2020 தேதியிட்ட புகார்  அளித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது அந்த டெண்டர் நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் தொழில்நுட்பத் துறை அறிவித்து உள்ளது.
அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் இது நிறுத்தி வைக்கப்படுவதாகவும்,  புகார் மீது விசாரணை நடத்தி முடிவுக்கு வந்தபின் டெண்டர்  திரும்ப விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.