சென்னை:

ருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ள நிலையில், எங்கப்பன்  குதிருக்குள் இல்லை என்ற வகையில், அவசரம் அவசரமாக  விசாரணை கமிஷன் அமைத்த ஆளுநர் பன்வாரிலாலை திரும்பப் பெற வேண்டும் என்றும், முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று  மத்திய அரசுக்கு தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி தனது மாணவியரிடம் பாலியல் வற்புறுத்தல் நோக்கில் பேசிய ஒலிக்கோப்பு வெளிவந்துள்ள நிலையில், ஆளுநர் உள்ளிட்டு உயர் கல்வித்துறை உயரதிகாரிகள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி யுள்ளனர்.

ஆளுநர் மீதே குற்றச்சாட்டு எழும்பி, அவர் மீதே விசாரணை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், இப்பிரச்சனையில் அவரே முந்திக்கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, உண்மைக் குற்றவாளிகள் மறைந்து கொள்ளவே உதவிடும். எனவே, பொருத்தமற்ற அந்த விசாரணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

அப்பன் குதிருக்குள் இல்லை என்ற வகையில் இயங்கிவரும் ஆளுநரை திரும்பப் பெறுவதுடன், இவை குறித்து உயர் நீதி மன்றத்தின் கட்டுப்பாட்டில் நடைபெறக்கூடிய விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளது.