சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  4லட்சத்து 39ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று மட்டும் 1,025பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,37,732 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில், 1,587 பேர் கொரோனா பாதிப்பில்  இருந்து மீண்டுள்ளனர். இதன் காரணமாக, சென்னையில் இதுவரை 1,22,407 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில் , 12,537 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 19 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,788 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்