சென்னை

மிழகத்தில் இன்று 1,035 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,11,115 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,217 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 70,620 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,34,29,444 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,035 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில்  வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 2 பேர் ஆவார்கள்.

இதுவரை  8,11,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,036 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,120 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 7,89,862 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 9,217 பேர் சிகிச்சையில் உள்ளனர்.