சென்னை

மிழகத்தில் இன்று 1,052 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,09,014 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,391 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 64,977 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,32,88,290 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,052 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில்  வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 6 பேர் ஆவார்கள். பிரிட்டனில் இருந்து ஒருவர் வந்துள்ளார்

இதுவரை  8,09,014 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இன்று 17 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,012 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,130 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 7,87,611 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 9,391 பேர் சிகிச்சையில் உள்ளனர்.