சென்னை:
மாநிலத் தலைவர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
bty

சென்னையில்  கடந்த ஒருவாரமாக  கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சென்னையில்  1,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  79,662 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை 62,552  பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 15,814 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,295 ஆக உயர்ந்துள்ளது.