சென்னை

மிழகத்தில் இன்று 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,02,392 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 75,116 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,09,533 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 2,12,99,220 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 10,941  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து 2 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 23 பேர் வந்துள்ளனர்.  இதுவரை  10,02,392  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 44 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 13,157 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 6,172  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 9,14,119  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 75,116 பேர் சிகிச்சையில் உள்ளனர்.