சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளது.

கடந்த ஒரு வாரமாக ஆயிரத்துக்கும் குறைவாக தொற்று பரவல் இருந்து வந்த நிலையில், இன்று 1187 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது சென்னை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,26,245 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு 1,14,260 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 837 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,00,643 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 11,209 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 25 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,408 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.