சென்னை: சென்னையில், இன்று 1,290 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், மொத்த கொரோனா பாதிப்பு 1,29,247- ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. ஆனால், தொற்று பாதிப்பு ஆயிரத்து 200ஐ தாண்டி வருகிறது.

 சென்னையில் இன்று ஒரே நாளில் 1,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகின நிலையில், இதுவரை  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,29,247-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1,137 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 1,13,092  ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், 13,517 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 20 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,638 ஆக உயர்ந்துள்ளது.