சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பரவல் ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் ஆயிரத்தை தாண்டி பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் தமிழக்ததில் இ-பாஸ் நடைமுறை தளர்வு செய்யப்பட்டதில் இருந்து, சென்னைக்கு வருவோர் எண்ணிக்கை கூடி வரும் நிலையில், சென்னையில் தொற்று பாதிப்பும் மீண்டும் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இன்று ஒரே நாளில் மேலும் 1,294 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மட்டும் கொரோனா  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,24,071 -ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனாவில் இருந்து 1,08,545 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை 2564 பேர் உயிரிழந்துள்ளனர்.