சென்னை: தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக  கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 7,77,616 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில்,   இன்று 1,442 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,77,616 ஆக அதிகரித்து உள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில், 883 பேர் ஆண்கள், 559 பேர் பெண்கள்.

கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,69,792 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,07,790 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆகவும் உள்ளது.

இன்று மட்டும் 1,494 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 54 ஆயிரத்து 826 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 12 பேர் உயிரிழந்தனர். அதில், 5 பேர் தனியார் மருத்துவமனையிலும், 7 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11,681 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 11,109 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 220 ஆய்வகங்கள் (அரசு-67 மற்றும் தனியார்-153) மூலமாக, இன்று மட்டும் 61,610 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 18 லட்சத்து 64 ஆயிரத்து 177 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.