டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,52,565 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,346 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 413 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,34,143 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,057 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,90,215 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை 7,170 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 82 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,82,219 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 826 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.