சென்னை

மிழகத்தில் இன்று 1,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,69,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 70,139 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,12,55,058 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,655 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் யாரும் இல்லை. இதுவரை  7,69,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 19 பேர் மரணம்  அடைந்துள்ளனர்.  இதுவரை 11,605 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,010 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 7,45,848 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 12,542 பேர் சிகிச்சையில் உள்ளனர்.