டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,24,409 ஆக உயர்ந்து 1,49,205 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 21,225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,03,24,631 ஆகி உள்ளது.  நேற்று 266 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,49,471 ஆகி உள்ளது.  நேற்று 20,903 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 99,25,527 ஆகி உள்ளது.  தற்போது 2,45,754 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,218 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,38,854 ஆகி உள்ளது  நேற்று 51 பேர் உயிர் இழந்து மொத்தம் 49,631 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,110 பேர் குணமடைந்து மொத்தம் 18,34,935 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 53,137 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 755 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,21,128 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,099 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 976 பேர் குணமடைந்து மொத்தம் 8,98,176 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 10,834 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 238 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,82,850 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,111 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 279 பேர் குணமடைந்து மொத்தம் 8,72,545 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,194 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 910 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,19,845 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,146 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,007 பேர் குணமடைந்து மொத்தம் 7,99,427 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 8,272  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,528 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,71,253 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,117 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,985 பேர் குணமடைந்து மொத்தம் 7,02,576 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 65,377 பேர் சிகிச்சையில் உள்ளனர்.