சென்னை:

மிழகத்தில் இன்று புதிதாக மேலும்  2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் தமிழகத்தில் 39 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில்,  தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 833 ஆக உயர்ந்துள்ளது.

நோய் தொற்றில் இருந்து இன்று  1,227 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில்,  தமிழகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,339 ஆக உயர்ந்துள்ளது.

இதில் தனியார் மருத்துவமனையில் 11 பேரும், அரசு மருத்துவமனையில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 36 பேர் உயிரிழந்தனர்.  வேறு நோய் இல்லாத 3 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதில் அதிகபட்சமாக, சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 2,478 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 38 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 55%ஆக உள்ளது.