சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 33,059 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், 364 பேர் பலியாகி உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் புதிதாக மேலும் 33,059 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் 8 பேர், மேற்குவங்கத்தை சேர்ந்த 2 பேர்ல, பீகார் மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,64,350 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,016 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில்  சிகிச்சைப் பெற்று வந்த 364 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 18,369 ஆக உயர்ந்துள்ளது.  இன்று பலியானவர்களில் 192 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 172 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில்,  மேலும் 21,362 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 14,03,052 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் 2,42,929 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.