சென்னை:
மிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,616 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 34,782பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,76,497 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,285 பேர் ஆண்கள், 1,542 பேர் பெண்கள். 95 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.
இன்று மட்டும் 66 பேர் உயிரிழந்தனர். 15 பேர் தனியார் மருத்துவமனையிலும், 46 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 4,545 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்த வர்களின் மொத்த எண்ணிக்கை 71,116 ஆக அதிகரித்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.