திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 37,290. மற்றும் ஆந்திரவில் 20,345 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 37,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,67,406 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 79 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,959 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 32,978 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 15,37,138 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,23,955 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 20,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 13,22,934 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 108 பேர் உயிர் இழந்து இதுவரை 8,899 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 14,502 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,18,933 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,95,102 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஏழாம் இடத்தில் உள்ளது.