சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 700ஐ கடந்துவிட்டது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஜூன் தொடங்கியது பாதிப்பின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கடந்த 3 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை தினமும் 2ஆயிரத்தைக் கடந்து வருகிறது. இன்று 4வது நாளாக தமிழகத்தில் 2396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புதிய உச்சம் இதுவாகும். இதனையடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,845ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இன்று ஒரே நாளில் மட்டும் 38 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்புகளுடன், பலிகள் அதிகரிப்பது கவலையளிக்கும் அமசமாக பார்க்கப்படுகிறது.