சென்னை:
மிழகத்தில் இன்று புதிதாக மேலும் 3,965 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளார். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிகைகை  1,34,226 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 3,591  பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  85,915 ஆக உயர்ந்துள்ளது.இ தனால் தொற்று அடைந்தவர்களில் இதுவரை 64.01 % பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,185 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  76,158 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 1,898-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் 36,628 பேருக்கு  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 15,00,909 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் மொத்தம் 46,410 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் தற்போது 17,989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.