விஜயவாடா
ந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,23,512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.
இதுவரை 7,23,512 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இன்று 38 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 6,019 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 7,558 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 6,66,453 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 51,060 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.