சென்னை:
மிழகத்தில் இன்று மேலும்  4,496 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1291 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களாக 1200க்கும் குறைவாக தொற்று அறியப்பட்ட நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 5ஆயிரம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா பாதிக்கப்பட்டோரை விட, குணமடைந்தோர்  அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மட்டும் 68பேர் உயிரிழந்தனர். 17பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது
இன்றும்  39,715 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
சென்னையில் இன்று 1,291 பேருக்குக்கும்,  சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,205 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
“வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட4,496பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஒரே நாளில் 41,357 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,95,365 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,723 பேர் ஆண்கள், 1,803 பேர் பெண்கள். 106பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.