சென்னை:
மிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக மேலும 4,538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,60,907  ஆக உயர்ந்துள்ளது.

இன்று 3,391 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து  குணமடைந்து வீடு திரும்பியதைத் தொடர்ந்து, இதுவரை   1,10,807 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,243 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  83,377 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 79 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,315ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதைய நிலையில்  47,782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பரிசோதனை  47,539 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 17,56,998 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.