பெங்களூரு

ர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 5199 பேருக்கு பாதிப்பு உறுதி ஆகி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96141 ஆகி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஊரடங்கு அறிவித்தும் பாதிப்பு கட்டுக்குள் வராததால் அம்மாநிலத்தில் ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் கர்நாடகாவில் 5196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் பாதிக்கப்பட்டோர்   எண்ணிக்கை 96141 ஆகி உள்ளது.

இன்று 82 பேர் மரணம் அடைந்து மொத்தம் 1878 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2088 பேர் குணம் அடைந்து மொத்தம் 35838 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 58417 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 632 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.