சென்னை

மிழகத்தில் இன்று 5344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம் 5,47,337 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 5344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் மட்டும் இன்று 952 பேருக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 5,47,337 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 60 பேர் மரணம் அடைந்துள்ளனர்

இதுவரை 8,871 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5492 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 4,91,971 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 46,495 பேர் சிகிச்சையில் உள்ளனர்