சென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழகம் முழுவதும் இன்று  543 பேருக்குக் தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில்,  225 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சையில் இருப்போர் மொத்த எண்ணிக்கை 3954 ஆக அதிகரித்துள்ளது. இன்று  தொற்று உறுதியானவர்களில்  276 பேர் ஆண்கள். பெண்கள் 206 பேர் பெண்கள்.

இன்று மட்டும் 562 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  8,37525 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி   5 பேர் உயிரிழந்துள்ளனர்.  அவர்களில் 3 பேர்  அரசு மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் இறந்துள்ளனர். இதுவரை பலியானோர்  மொத்த எண்ணிக்கை 12,513 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கையில் ஆண்கள் 5,15,644 பேர். பெண்கள் 3,37,770 பேர். மூன்றாம் பாலினத்தவர் 35 பேர்.

இதுவரை கொரோனா சோதனைக்காக  எடுக்கப்பட்ட மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 1,7419485. இன்றுமட்டும் எடுக்கப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை  54676.