சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கி உள்ளது.

இன்று ஒரே நாளில் 5,519 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,91,571 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில்  6,006  பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். இது தொற்று பாதிப்பை விட அதிகமாகும்.

இன்று மட்டும 77 பேர் தொற்று பாதிப்பு காரணமாக உயரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில்  இன்று 987 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.