சென்னை

ன்று தமிழகத்தில் 5752 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 5,08,511 ஆகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 78,190 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 57,79,589 பேருக்கு சோதனை நடந்துள்ளது.

இதில் இன்று 5752 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 10 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்.

மொத்தம் பாதிப்[படைந்தோர் எண்ணிக்கை 5,08,511 ஆகி உள்ளது.

இதில் 3153 பேர் ஆண்கள் மற்றும் 2599 பேர் பெண்கள் ஆவார்கள்

இன்று கொரோனாவால் 53 பேர் மரணம் அடைந்து மொத்தம் 8434 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5799 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை 4,53,165 பேர் முழுவதுமாக குணம் அடைந்துள்ளனர்.

தற்போது 46,912 பேர் சிகிச்சையில் உள்ளனர்.