சென்னை: தமிழகத்தில் இன்று மேலும்,  5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  3,08,649 ஆக அதிகரித்துள்ளது.

அதிக பட்சமாக சென்னையில் 986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட உள்ளது.

இன்று ஒரே நாளில் 6005 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதுவரை 2,50,680) பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துஉள்ளனர்.

இன்று ஒரே நாளில் 118 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.இதன் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,159 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சோதிக்கப்பட்ட மாதிரிகள்: 67,492
இன்று செயலில் உள்ள வழக்குகள்: 52,810
இன்று தொற்று அறியப்பட்டவர்கள்:  5,834
இறப்புகள்: 118 / 5,159
மொத்த நேர்மறை: 3,08,649
சென்னையில் புதிய வழக்குகள்: 986 சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 3,08,649-ல் சென்னையில் மட்டும் 1,11,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,50,680 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 20 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,48,747.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,848 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 61 அரசு ஆய்வகங்கள், 70 தனியார் ஆய்வகங்கள் என 131 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழதகத்தில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 52,810.

மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 33,60,450.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 67,492.

இன்று தொற்று பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,377 பேர். பெண்கள் 2,457 பேர்.. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,86,156 பேர்/ பெண்கள் 1,22,464 பேர் மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் .

இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 118 பேர் உயிரிழந்தனர். இதில் 47 பேர் தனியார் மருத்துவமனையிலும், 71 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 5,159ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 2,350 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 107 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 11 பேர்.

இவ்வாறு தமிழக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.