சென்னை: தமிழகத்தில் இன்று  மேலும் 5892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  4,45,851 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 6110 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதனால், இதுவரை குணமடைந் துள்ளோர் எண்ணிக்கை 3,86,173 ஆக உயர்ந்துள்ளது. இது 86.61% சதவிகிதமாகும்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 92 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 7608 ஆக அதிகரித்தள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளார். இதனால், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,724ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 52,070 ஆக உள்ளது.

இன்று ஒரே நாளில் 82,901 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 48,80,769.

தமிழகத்தில் மொத்தம் 154 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 64 அரசு மருத்துவமனைகளிலும், 90 தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை 50,47,042 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 82,901 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 2,69,135 பேரும், பெண்கள் 1,76,687 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் 12 வயதிற்குள் 20,322 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 3,67,416 பேரும், 60 வயதிற்கு மேல் 58,113 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.