சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,951 பேர் கொரோனா வைரசால்பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,270 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,27,949 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இன்று 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் 65 பேர் அரசு மருத்துவமனையிலும், 42 பேர் தனியார் மருத்துவமனையிலும் இறந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில்  6,998 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து  குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,32,455 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70,221 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 43,46,861 -ஐ கடந்துள்ளது.

தற்போதைய நிலையில்,  52,128 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 41,99,492 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து இன்று தமிழகத்திற்கு வந்த 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 2,36,294 பேரும், பெண்கள் 1,54,980 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் 12 வயதிற்குள் 18,433 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 3,22,686 பேரும், 60 வயதிற்கு மேல் 50,184 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.