சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  மொத்த எண்ணிக்கை 4,51,827ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 79 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 7,687ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,39,720ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 6334 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,92,507 ஆக அதிகரித்து உள்ளது.

தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 49 லட்சத்தைத் தாண்டி உள்ளது. தமிழகத்தில் இதுவரை 49,62,357 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 83,699 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 155 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 64 அரசு மருத்துவமனைகளிலும், 91 தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை நடத்தப்படுகிறது.

பிற மாநிலங்களில் இருந்து இன்று தமிழகத்திற்கு வந்த 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 2,72,739 பேரும், பெண்கள் 1,76,059 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் 12 வயதிற்குள் 20,506 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 3,72,348 பேரும், 60 வயதிற்கு மேல் 58,973 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.