சென்னை: தமிழகத்தில் இன்று 5980 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,73,410  ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 1294 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,603 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,13,2807-ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தோர்எண்ணிக்கை 80 ஆக உள்ளது. இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,420 ஆக அதிகரித்துள்ளது. அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 57 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 73,547 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 41,36,490-ஐ கடந்துள்ளது.