டில்லி

ன்று ஆந்திரா மாநிலத்தில் 68 பேர், மற்றும் டில்லியில் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் இன்று 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,88,760 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   

இன்று ஒருவர் மரணம் அடைந்து இதுவரை 7,162 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 106 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,80,784 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 814 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திரா மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,36,670 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 3 பேர் உயிர் இழந்து இதுவரை 10,889 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 136 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,24,728 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 1,053 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.