விஜயவாடா

ந்திர மாநிலத்தில் இன்று 8555 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 1,58,764  ஆகி உள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு தொடர்ந்து தினசரி 10000க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டது.

இன்று ஆந்திராவில் 8555 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,58,764 பேர் பாதிக்கபட்டுளனர்.

இன்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 1474 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 6272 பேர் குணம் அடைந்து இதுவரை 87,886 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 74,404 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திரா மூன்றாம் இடத்தில் உள்ளது.