சென்னை:  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,40,685  ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை  1,26,428 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும் 11,412 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று 19 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,845 ஆக உள்ளது.