சென்னை

மிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 10,37,711 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 89,428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,13,144 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 2,12,79,542 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 12,652  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிமாநிலங்களில் இருந்து 36 பேர் வந்துள்ளனர்.  இதுவரை  10,37,711  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 59 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 13,317 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 7,526  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 9,34,966  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 89,428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.