சென்னை

மிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 12,97,500 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,31,468 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,44,948 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 2,31,24,635 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 24,898பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளி நாடுகளில் இருந்து ஒருவரும் வெளிமாநிலங்களில் இருந்து 26 பேரும் வந்துள்ளனர்.  இதுவரை  12,97,500  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 195 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 14,974 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 21,546  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 11,51,058  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,31,468  பேர் சிகிச்சையில் உள்ளனர்.