ன்று அனுமன் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நாமக்கல்  ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா மிகவும் விசேஷமானது.

இன்றைய தினம் திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கினால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அஞ்சனை என்னும் கந்தர்வப் பெண்ணிடம் வாயுவின் அனுக்கிரகத்தால் உதித்ததால் ஆஞ்சநேயர் எனப் பெயர் பெற்றார். அவரது பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

உடல் வலிமை, துணிச்சல், புகழ், அறிவு, ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ஆஞ்சநேயர்.  ராமாயணத்தில் ராமனுக்கு அடுத்தபடி யாக இடம்பிடித்தவர்.  சீதாதேவியால் ‘சிரஞ்சீவி’ பட்டம் பெற்றவர். அவரது பிறப்பு மகத்துவம் மிகுந்தது.

திரேதாயுகத்தில் குஞ்சரன் என்ற சிவபக்தன் வெகுகாலமாக குழந்தை இல்லாமல் வருந்தினான். குழந்தைச் செல்வம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தான். தவத்தின் வாயிலாக அருக்கு அஞ்சனை என்ற மகள் பிறந்தாள். இவருக்கு வானர தேச அரசன் கேசரிக்கும் மணம் முடிக்கப்பட்டது. இவர்கள் குழந்தைக்காக ஏக்கி தவம் இருந்தனர். அப்போது  அஞ்சனை முன் தோன்றிய தர்மதேவதை, வேங்கடமலைக்கு கணவனுடன் சென்று மகாதேவனை குறித்து தவம் செய்தால், விண்ணவர் போற்றும் மகன் பிறப்பான்’ என்று வாக்களித்தது.

அதன்படி அஞ்சனை கடும் தவம் செய்தால். உணவாக காற்றை மட்டுமே உண்டாள். இதன் காரணமாக மனம்மகிழ்ந்த வாயுதேவன் சிவசக்தி வடிவான கனி ஒன்றை , அஞ்சனையின் கைகளிலே வந்து தங்கும்படி செய்தார்.

இதனால் மகிழ்வுற்ற அஞ்சனை தனக்கு கிடைத்த கனியை உண்டாள். சில காலங்களில் கர்ப்பம் தரித்த அவளுக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரம் கூடிய நன்னாளில் அஞ்சனாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அஞ்சனாதேவியின் மகன் என்பதால், அவர் ஆஞ்சநேயர் என்று அழைக்கப் பட்டார்.

வனவாசம் வந்த ஸ்ரீராமனுக்கு, எந்தவித பிரதிபலனையும் கருதாமல் தூய அன்புடனும், பக்தி யுடனும் தொண்டு செய்தார். ராமனுக்கு பணிவிடை செய்வதையே தனது கர்மமாக நினைத்து சேவை செய்தார்.

இலங்கையிலிருந்து சீதையை வணங்கி அனுமன் விடை பெற்றுக் கொள்ளும்போது சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து ஓர் இலையைக் கிள்ளி அனுமன் தலையில் போட்டு வாழ்த்தியதால் அவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து நாம் அவரது ஆசியைப் பெறலாம்.

ஆஞ்சநேயருக்கு  வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயலும் வெற்றியாகவே முடியும்.

ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

துளசி மாலை சாற்றினால் பாவங்களில் இருந்து நிவர்த்தி உண்டாகும்.

வடை மாலை சாற்றினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும்.

குறிப்பாக சனிப் பெயர்ச்சி நடப்பவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும்.

அனுமன் விரதம் இருப்பது எப்படி?

அனுமன் ஜெயந்தி அனறு  தினம் நாம் விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கை கூடும். துன்பம் விலகும். இன்பம் பெருகும்.

அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவு உண்ணாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடை மாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணை சாத்தி வழிபட வேண்டும்.

வாலில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானது. அவல், சர்க்கரை, தேன், பானகம், கடலை, இளநீர் முதலிய பொருட்கள் அனுமனுக்கு மிகவும் பிடிக்கும். அதை நைவேத்தியம் செய்வதனால் அனுமன் மிக மகிழ்வார்.

அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம்.

பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். மார்கழி மாதம் வளர்பிறை திரயோதசியன்று 13 முடிச்சுகளோடு கூடிய மஞ்சள் கயிற்றை கலசத்திற்குள் வைத்து ஓம் நமோ பகவதே வாயு நந்தனாய என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், தனம், பூ மேலும் மற்ற பூஜை பொருட்களால் பூஜை செய்ய வேண்டும்.

கோதுமை மாவினால் தயார் செய்யப்பட்ட 13 பூரி, வெற்றிலை பாக்கு, தட்சணையோடு ஒரு தட்டில் வைத்து அந்தணருக்கு கொடுக்கலாம். மேலும் அந்த அந்தணருக்கு சாப்பாடும் போடலாம். அனுமன் விரத தொடக்கத்தில் இவ்வாறு செய்வதால் சகல காரியங்களும் வெற்றி அடையும்.

காலை உணவாக பொரியும், பழமும் சாப்பிட வேண்டும். இதை பிறருக்கும் வழங்கலாம். பகல் உணவாக கிழங்கு, காய்கறிகளை சாப்பிடலாம். இரவில் ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும்.

இன்றைய தினம் ஆஞ்சநேயரை வழிபட்டு அவரது ஆசிகளை பெறுவோம்…