சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று மாலை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அனைத்துக்கட்சிகள் சார்பிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும்,  அனைத்து கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர் உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சிகள் கலந்துகொள்கின்றன.

 

புதுக்கோட்டையில் இன்று மாலை நடைபெற உள்ள  மனிதச்சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதேபோல மற்ற மாவட்டங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தோழமை கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.

இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை மனி சங்கிலி பேராட்டம் நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.