சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர  நடப்பாண்டில், இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், பொறியியல் படிப்பிற்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்றே கடைசி நாள்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பிக்கும் தேதி  கடந்த 16ந்தேதியுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் இதுவரை பொறியியல் படிப்புக்கு மொத்தமாக 1,60,504பேர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியவர்கள்,  தங்கள் கல்வி, சாதிச் சான்றிதழ் கள் உள்பட விண்ணப்பத்தி கேட்கப்பட்ட சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்த  சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்றே கடைசிநாள் ஆகும்.

நேற்றுவரை  90 ஆயிரத்து 272 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து  இருப்பதாகவும், மீதமுள்ள வர்கள் இன்று மாலைக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பம் பதிவு செய்த மாணவ-மாணவிகளில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) கடைசிநாள் ஆகும்.