திருவண்ணாமலை

ன்று திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியும், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியும் மோத உள்ளன.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையை நடத்தி வருகின்றன.

திமுக கூட்டணி சார்பில் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஏற்கனவே முதல் கட்ட பரப்புரையை முடித்துள்ளார்.  அடுத்த கட்ட பரப்புரையை ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்னும் பெயரில் இன்று காலை 8 மணிக்கு திருவண்ணாமலையில் தொடங்க உள்ளார்.

அதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்ற ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார்.  அதன்பிறகு கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று தனது தாயிடம் ஆசி பெற்று காரில் திருவண்ணாமலைக்குச் சென்றுள்ளார்.