சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் சென்னை உள்ளது. அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இன்று அங்கு ஒரே நாளில் மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை நேற்று (11ந்தேதி) மாலை அறிவித்த தகவலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 2444 ஆக இருந்தது. இதில் 903 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 20 பேர் மரணம் அடைந்துள்ளனர். 1520 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று மேலும் 96 பேர் பாதிக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு  2,540-ஆக உயர்ந்துள்ளது.