சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5795 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று 1186 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இன்று மட்டும் 6384 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

 வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,017 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது/

வெளிநாடுகளில் இருந்து வந்த 885 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 755 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 6,21,641-ஆக அதிகரித்துள்ளது.