06-1462512585-exam-results-12-600
தமிழகம் மற்றும் புதுவை யூனியன் பிரதேச பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது.
கடந்த மார்ச் மாதம் 4 ஆம் தேதி   பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் துவங்கின.  ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நடைபெற்றன.. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினார்கள்.
பிறகு விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கி, நிறைவடைந்தன. இந்த  நிலையில், தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படும் என்று, அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவித்தது. .
அதன்படி  இன்று காலை 10.30 முதல் 11 மணிக்குள் முடிவுகள் வெளியிடப்படும்.
தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in. உள்ளிட்ட இணையதளங்கள் மூலம்  உடனுக்குடன் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
பிளஸ் டூ மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து வரும் 19ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பள்ளிகள் அல்லது தேர்வு எழுதிய மையங்களில் இருந்தும் மதிப்பெண் பட்டியலை பெற முடியும்.  மறு கூட்டலுக்கு விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுதினம் தாங்கள்  பயின்ற பள்ளி மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.