டில்லி

ன்று ஆந்திரா மாநிலத்தில் 1,941 கர்நாடகாவில் 6,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 6,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,26,584 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 39 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,657 பேர் உயிர் இழந்துkeeள்ளனர்.

இன்று 3,487 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,68,762 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 45,107 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,10,943 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 7 பேர் உயிர் இழந்து இதுவரை 7,251 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 835 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,91,883 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 11,807 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.